search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி பேரணி"

    • தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.
    • அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.

    இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    எண்ணித் துணிக கருமம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    • தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா சமாதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அண்ணா-எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்குதான் மலர்தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி தி.மு.க.வினர் அமைதி பேரணியாக சென்றனர்.

    தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை த.வேலு, இளைய அருணா மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    • அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
    • மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரியில் அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சென்னையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் இன்று நடைபெற்றது.

    அண்ணசாலை ஓமந்தூரர் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதை தொடர்ந்து அவரது தலைமையில் அங்கிருந்து அமைதி பேரணி புறப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைதி பேரணியில் நடந்து சென்றனர்.

    இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தன்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, பல்லாவரம் இ.கருணாநிதி, தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, எழிலன், பரந்தாமன், இனிகோ இருதயராஜ், எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், கிருஷ்ணசாமி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மாவட்டச் செயலாளர்கள் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், கவிஞர் காசி முத்து மாணிக்கம், பகுதிச் செயாளர்கள் மதன் மோகன், கே.ஏழுமலை, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, வழக்கறிஞர் ராஜாராமன், படப்பை மனோகரன், திருநீர்மலை ஜெயக்குமார், பாலவாக்கம் விசுவநாதன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த பேரணி மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு சென்றடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினை டத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    இதன் பிறகு அண்ணா நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
    • பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர்.

    ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

    • அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி.
    • மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக, உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், அண்ணாவோடு தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றி அவரது மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி.

    அவரின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்பட கட்சியின் முன்னணியினர் கலந்துகொள்ளும் அமைதி பேரணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படும்.

    பின்னர் மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

    அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    • ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.

    இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூமி வடிவிலான மாத்திர் மந்திரியை சுற்றி, அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அதே போன்று வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதை கண்டிக்கும் வகையிலும் ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.

    பின் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சோலார் கிச்சன் வரை கையில் பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி சென்றனர். அங்கிருந்து மீண்டும் விசிட்டர் சென்டரை வந்தடைந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்.
    • கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் அமைதி பேரணியை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 5-ந்தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அமைதி பேரணியும் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும். கழகமும் மக்களும் நம் பக்கம் தான் என்பதை மக்கள் மன்றத்திற்கு உணர்த்த வேண்டும். லட்சக்கணக்கில் அணி திரண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ஒரு கூட்டம் வெள்ளிக்காசுகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது. நாம் மட்டும் தான் அமைதியாக செயல்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றி வாய்ப்பை வெல்லப்போகிறோம் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், பி.வைரமுத்து, மகிழன்பன், ரெட்சன் அம்பிகாபதி, ரஞ்சித்குமார், எம்.எம்.பாபு கிருஷ்ணன், ஜேகே ரமேஷ், பி.எஸ்.சிவா,சதீஷ், அச்சுதன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் குருமோகன், இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், இளைஞரணி இணைச்செயலாளர் ஜூனியர் எம்.ஜி.ஆர்., மீனவர் அணி செயலாளர் கோசு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், சிவகங்கை கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேர்ந்த புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
    • ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர்.

    அரவேணு

    கோத்தகிரியில் பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோத்தர் பழங்குடியின மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியானது கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு, பாண்டியன்பார்க், கிருஷ்ணாபுதூர், கம்பாய் கடை, மார்க்கெட், ராம்சண்ட் என முக்கிய சாலைகள் வழியாக தாசில்தார் அலுவலகம் சென்று மனுவை வழங்கினார்.

    பின்னர் ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர். அமைதி பேரணியில் பங்கேற்ற மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, கருப்பு கொடியுடன் தங்களது பாரம்பரிய இசையை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

    இதுகுறித்து பேரணியை தலைமை ஏற்று நடத்திய கம்டே சுப்பிரமணிய கூறுகையில், நாங்கள் உழவர் சந்தைக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் பழங்குடியின மக்களின் கோவில் அமைந்துள்ளதால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விடும் என்பதால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்தே எங்களது கோரிக்கை என்றார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் பங்கேற்பு
    • ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று நடந்தது.

    வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து நடந்த அமைதி பேரணிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். வடசேரியில் இருந்து புறப்பட்ட பேரணி மணிமேடை வழியாக வேப்பமூடு வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.

    அமைதிப் பேரணியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். எஸ். பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுரேந்திர குமார், வர்த்தக அணி அமைப்பாளர் சி.என். செல்வன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என். சங்கர், தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே. ராஜன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணா நிதியின் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

    • 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக, எழுத்தாளராக , கவிஞராக, இலக்கியவாதியாக, தலைசிறந்து விளங்கிய தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. வடசேரி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக பொன்னப்ப நாடார் திடலில் அமைக்கப் பட்டிருக்கும் கருணாநிதி திருஉருவ படத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர். ஆகவே கழகத்தின் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் .

    மேலும் தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×